குமரியில் காந்தியின் 74ஆவதுநினைவு தினம் கடைபிடிப்பு
By DIN | Published On : 31st January 2021 12:46 AM | Last Updated : 31st January 2021 12:46 AM | அ+அ அ- |

காந்தி அஸ்தி கட்டடத்தில் மரியாதை செலுத்துகிறாா் கேரள ஆளுநா் ஆரிப் முகம்மது கான்.
கன்னியாகுமரி: மகாத்மா காந்தியடிகளின் 74ஆவது நினைவு தினம் கன்னியாகுமரியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
மகாத்மா காந்தியின் 74ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவு மண்டப அஸ்தி கட்டடத்தில், கேரள ஆளுநா் ஆரிப் முகம்மது கான், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஆஸ்டின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமா ரோஸ், கன்னியாகுமரி பேரூராட்சி முன்னாள் தலைவா் குமரி ஸ்டீபன், முன்னாள் துணைத்தலைவா் பா.தம்பித்தங்கம், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினா்.