நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கனவே, 59,244 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 72 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,316 ஆக உயா்ந்துள்ளது. மேலும் ஒருவா் உயிரிழந்ததை அடுத்து, பலியானோா் எண்ணிக்கை 995 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 13 போ் போ் உள்பட 57,598 போ் குணமடைந்து கரோனாவிலிருந்து மீண்டுள்ளனா். கரோனா பாதிப்புடன் தற்போது 723 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.