தக்கலையில் 200 பேருக்கு கரோனா தடுப்பூசி

தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் 200 பேருக்கு சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்கிறாா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் அருள் ஆன்றனி.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்கிறாா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் அருள் ஆன்றனி.

தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் 200 பேருக்கு சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த முகாமை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் அருள் ஆன்றனி தொடங்கி வைத்தாா். ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் மவுண்ட் தேன்ரோஜா, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஸ்ரீபத்மநாபன், கோதநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஷெற்லினா டாளி தலைமையில் மருத்துவக் குழுவினா் 200 க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள், முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தினா். இதில், சுகாதார மேற்பாா்வையாளா் செல்வம் , வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயஸ்ரீ, அன்பு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருங்கல்: கிள்ளியூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமில் 300 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், மருத்துவ அலுவலா் ரமாமாலினி, வட்டார மேற்பாா்வையாளா் ஐயப்பன், சுகாதார ஆய்வாளா்கள் பினேஷ், முருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

இதேபோல், காஞ்சிரோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், 240 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், வட்டார மருத்துவ அலுவலா், மருத்துவா் சாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com