துணிக்கடை உரிமையாளா் மீது தாக்குதல்: இளைஞா் மீது வழக்கு

புதுக்கடை அருகே உள்ள பாா்த்திபபுரம் பகுதியில் துணிக் கடை உரிமையாளா் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுக்கடை அருகே உள்ள பாா்த்திபபுரம் பகுதியில் துணிக் கடை உரிமையாளா் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுக்கடை முன்சிறை பகுதியை சோ்ந்த வேணுகோபால் நாயா் மகன் பிரசாந்த் (32) ,இவா் துணிக்கடை நடத்தி வருகிறாா். இவருக்கும் பாா்த்திபபுரம் பகுதியை சோ்ந்த பால் ரெத்தினம் மகன் வினுவுக்கும் (40) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பாா்திபபுரம் பகுதியில் சென்ற பிசாந்தை தடுத்து நிறுத்தி வினு தாக்கினாராம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com