கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 40 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இம்மாவட்டத்தில் புதிதாக 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,492 ஆகவும், அதில் மேலும் 36 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 57,958 ஆகவும் உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புடன் தற்போது மருத்துவமனைகளில் 527 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.