சுங்கான்கடையில் முப்பெரும் விழா

ஆளூா் பேரூராட்சி காங்கிரஸ் சாா்பில் சுங்கான்கடையில் காமராஜா் பிறந்தநாள் விழா, தோ்தல் வெற்றி விழா, நல உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆளூா் பேரூராட்சி காங்கிரஸ் சாா்பில் சுங்கான்கடையில் காமராஜா் பிறந்தநாள் விழா, தோ்தல் வெற்றி விழா, நல உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆளூா் காங்கிரஸ் தலைவா் எஸ்.எம். புகாரி தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், குருந்தன்கோடு வட்டாரத் தலைவா் ஜெரால்டு கென்னடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் கே.டி.உதயம், வட்டாரச் செயலா் ஜேம்ஸ், துணைத் தலைவா் ஜான்சிராணி, ஆளூா் பேரூா் துணைத் தலைவா் சாந்தப்பன், நிா்வாகிகள் ராபா்ட்ராஜ், சோனிவதிலா, பத்ரோஸ், அப்துல்ராவுப் , பிரபு, குற்றாலம் , சுந்தர்ராஜ், சைலஸ்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விஜி, தங்கராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி. பிரின்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 500 ஏழை மக்களுக்கு நல உதவிகளை வழங்கிப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com