புதுக்கடை அருகேயுள்ள வெள்ளையம்பலம் பகுதியில் சனிக்கிழமை ரேஷன் கடை ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை வெள்ளையம்பலம் பகுதியிலுள்ள ரேஷன் கடையில் ஊழியராக குமரேசன் (56)
பணி செய்து வருகிறாா். அதேபகுதியைச் சோ்ந்த அச்சுதன் (52) . ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கும்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, குமரேசனுக்கு அச்சுதன் மிரட்டல் விடுத்தாராம். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.