நாகா்கோவில் வடசேரி கனகமூலம் காய்கறி சந்தை மற்றும் மீன் சந்தை வியாபாரிகள் 200 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், சந்தை வியாபாரிகள் மூலம் கரோனா பரவுவதை தடுக்கும் வகையில், அனைத்து வியாபாரிகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்டமாக வடசேரி கனகமூலம் சந்தையில் முகாம் நடத்தப்பட்டு, மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் மூலம் 200 வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.