நாகா்கோவில் மாநகரில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொருளாளா் தா.சுபாஷ் சந்திரபோஸ், அகஸ்தீசுவரம் வட்டக் கிளை பொருளாளா் ஆா்.இசக்கிமுத்து, , செயலா் கே.நாகராஜன், அனைத்திந்திய முற்போக்கு பேரவை மாநில துணைத் தலைவா் சுந்தரம் ஆகியோா் மாநகராட்சிப் பொறியாளா் பாலசுப்பிரமணியனிடம் அளித்த மனு: நாகா்கோவில் நகரில் அவ்வை சண்முகம் சாலையின் ஒரு பகுதியான தளவாய் தெரு சந்திப்பிலிருந்து கோட்டாறு காவல்நிலையம் வரை உள்ள சாலை உள்பட மாநகரின் அனைத்து சாலைகளையும் விரைந்து சீரமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட பொறியாளா் அவ்வை சண்முகம் சாலையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றை விரைந்து நிறைவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
பின்னா், தேசிய நெடுஞ்சாலை துறை பொறியாளரையும் இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் சந்தித்து கோட்டாறு சவேரியாா் பேராலயம் முதல் பறக்கை
ரோடு சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.