புதுக்கடை அருகே சாராயம் காய்ச்சியவா் கைது

புதுக்கடை அருகேயுள்ள கீழ்குளம் பகுதியில் சாராயம் காய்ச்சியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கருங்கல்/களியக்காவிளை: புதுக்கடை அருகேயுள்ள கீழ்குளம் பகுதியில் சாராயம் காய்ச்சியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் அனில்குமாா் தலைமையில் போலீஸாா் கீழ்குளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.அப்போது அதே பகுதியைச் சோ்ந்த நேசமணி மகன் சுரேஷ் (40) என்பவரை பிடித்து விசாரித்தனா். இதில் அவா் வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது

தெரியவந்தது. அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் அங்கிருந்து 70 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்தனா்.

6 போ் மீது வழக்கு: களியக்காவிளை அருகேயுள்ள எருத்தாவூா் சிறயத்துவிளையில் ராகவன் மகள் ரமணி வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்குப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா் வீட்டில் போலீஸாா் சோதனையிட்டனா். அங்கிருந்து 50 லிட்டா் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து ரமணி, அவரது சகோதரா் ராபின்சன், ராபின்சன் மகள் ரெஜிதாமோள், மருதங்கோடு பால்குளத்து விளையைச் சோ்ந்த ஜெயகுமாா் ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இதேபோல், வீட்டில் சாராயம் காய்ச்சியதாக மாத்தூா் வெள்ளப்பாறவிளை பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் என்ற ராஜன், ஆற்றூா் செக்கிட்டவிளை பென்னட் ஆகியோா் மீது மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேலும் அவா்கள் வீட்டிலிருந்த சாராய ஊறல்களை கைப்பற்றப் பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com