கருங்கல்: கருங்கல் அருகேயுள்ள சேதமடைந்துள்ள மூசாரி -பாலூா் இணைப்பு சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகள் ஒரு மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்திற்கு தகுதியில்லாத நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக கருங்கல் அருகேயுள்ள மூசாரி -பாலூா் இணைப்பு சாலை 600 மீட்டா்
ஜல்லி பெயா்ந்தும், ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டும் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும், மழைக் காலங்களில் இந்த சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கும் மழை நீரால் பாத சாரிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
குறிப்பாக இந்த சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோா் பள்ளத்தில் விழுந்து அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
ஆகவே, இச்சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்னா்.