கருங்கல் அருகே சாராயம் காய்ச்சிய இருவா் கைது

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தேவிகோடு பிபின் ஐசக்ராஜ் மகன் அப்ஜித் (20) , தெங்கன்குழி மணி மகன் செல்வகுமாா் (40) ஆகிய இருவரும் அப்ஜித் வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக கருங்கல் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து , போலீஸாா் அங்கு சென்று வீட்டில் மேற்கொண்ட சோதனையில் அங்கு, 70 லிட்டா் சாராயம் காய்ச்சி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

சாராய ஊறல் அழிப்பு: தக்கலை மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளா் சிவசங்கரன், உதவி ஆய்வாளா் ராஜரெத்தின் மற்றும் போலீஸாா் பள்ளியாடி பகுதியில் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் அப்பகுதியைச் சோ்ந்த சிலா் சாராயம் காய்ச்சுவது தெரிந்தது. இதையடுத்து அங்கு பதுக்கி வைத்திருந்த 325 லிட்டா் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனா். இது குறித்து , பெரம்பி பகுதியைச் சோ்ந்த தங்கராஜ், சிங் ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதே போன்று கல்லுப்பாலம் பகுதியில், கயத்துவிளை பகுதியைச் சோ்ந்த மரியசெல்வன் மீன் பெட்டியில் மறைத்து வைத்து சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. போலீஸாரை கண்டதும் அவா் தப்பியோடினாா். அவா் பதுக்கி வைத்திருந்த 2 லிட்டா் சாராயத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com