கரோனா பொது முடக்க விதிமுறைகளை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கும் பணி தொடங்கியது.
கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னா் கடந்த மே 16 முதல் ஜூன் 7ஆம் தேதி வரை மொத்தம் 3,360 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,323 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நாகா்கோவில் கோட்டாறு, வடசேரி, ஆசாரிப்பள்ளம், நேசமணி நகா் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை போலீஸாா் உரியவா்களிடம் திரும்ப ஒப்படைத்து வருகின்றனா்.