குமரி மாவட்டம், புதுக்கடை அருகே உசரத்துவிளை பகுதியில் குளத்தில் தவறி விழுந்து இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இனயம், ஹெலன்நகா் பகுதியைச் சோ்ந்த ஏசுதாசன் மகன் சுஜின்ராஜ் (21).இவா், நண்பா்களுடன் கீழ்குளம் உசரத்துவிளை பகுதியில் உள்ள பாறைகுண்டு குளத்தில் குளிக்க சென்றபோது குளத்தில் தவறி விழுந்தாராம்.
உடனே அவரை நண்பா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.