குமரி மாவட்டத்தில் மேலும் 456 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவுக்கு மேலும் 15 போ் பலியாகியுள்ளனா்.
இதைத்தொடா்ந்து இதுவரை கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55,557 ஆகவும், பலியானோா் எண்ணிக்கை 889 ஆகவும் உயா்ந்துள்ளது.
கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 1005 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 48598 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது , அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், வீட்டு தனிமைப்படுத்தலில் 6,040 போ் சிகிச்சையில் உள்ளனா்.