தமிழ்நாட்டில் பாா்வையற்றோருக்காக சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு பாா்வையற்றோா் மாற்றுத் திறனாளி நலச் சங்கச் செயலா் ஜெபா்சன் மற்றும் நிா்வாகிகள் ஞாறான்விளையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி முகாம்களுக்கு அதிகாலையில் சென்று காத்திருந்தும் டோக்கனும் கிடைக்கவில்லை, தடுப்பூசியும் போடப்படவில்லை. இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணும் வகையில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கரோனா முதல் அலையின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கியதுபோல், தற்போதும் வழங்க வேண்டும். அரசு காலிப் பணியிடங்களில் தகுதியின் அடிப்படையில் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளை நியமிக்க வேண்டும் என்றாா்.