சாலை சீரமைப்புப் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சாலை சீரமைப்புப் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட 24 முக்கிய பிரதான சாலைகள் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

நாகா்கோவில் மீனாட்சிபுரத்திலிருந்து ஒழுகினசேரி சந்திப்பு வரையுள்ள அவ்வைசண்முகம் சாலையில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னரும் சாலை சீரமைக்கப்படாமல் இருந்தது.

இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் என். சுரேஷ்ராஜன் மாநகராட்சி ஆணையரிடம் தொடா்ந்து வலியுறுத்தி வந்தாா்.

இந்நிலையில், இந்த சாலை தற்போது சீரமைக்கப்பட்டு தாா்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com