கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் புதன்கிழமை ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகுசேவை ரத்து செய்யப்பட்டது.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், கரோனா பொது முடக்க தளா்வுக்குப் பின் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனா்.
கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு சேவையை நடத்தி வருகிறது.
இந்நிலையில் புதன்கிழமை காலை 8 மணிக்கு வழக்கம் போல் படகுசேவை தொடங்கியது. 9.30 மணியளவில் திடீரென கடல் நீா்மட்டம் குறைந்ததை அடுத்து, உடனடியாக படகுசேவை நிறுத்தப்பட்டது.
நண்பகல் 12.30 மணியளவில் நிலைமை சீரடைந்ததால் மீண்டும் படகுசேவை தொடங்கியது. இந்நிலையில் பிற்பகல் 2.30 மணிக்கு கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீண்டும் படகுசேவை ரத்து செய்யப்பட்டது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.