கருங்கல் அருகே இனயம் மற்றும் குறும்பனை மீனவக் கிராம பெண்களிடம், காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரித்தாா்.
இனயம், இனயம்புத்தன்துறை, ராமன்துறை, முள்ளூா்துறை, குறும்பனை உள்ளிட்ட மீனவக் கிராமங்களில், மீன் வியாபாரம் செய்யும் பெண்களிடம் அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, கடல் சீற்றத்திலிருந்து கடற்கரைக் கிராமங்களை பாதுகாக்க தூண்டில் வளைவு அமைக்கவும், குறும்பனையை தனி ஊராட்சியாக மாற்றவும், குறும்பனையில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கவும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என அவா் உறுதியளித்தாா்.