கன்னியாகுமரி
மாடித்தோட்டம் அமைப்பது குறித்த செயல்விளக்கம்
கிள்ளிகுளம் அரசு வேளாண் கல்லூரி மாணவிகள், கல்குளம் கிராம மக்கள் மத்தியில், மாடித்தோட்டம் அமைப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.
கிள்ளிகுளம் அரசு வேளாண் கல்லூரி மாணவிகள், கல்குளம் கிராம மக்கள் மத்தியில், மாடித்தோட்டம் அமைப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.
இக்கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் காவியா, கிருஷ்ணஸ்ரீ, லக்ஷ்மி ப்ரஸீதா, பிரசன்னா, லாவண்யா, லோகேஷ்வரி, மேரி, நா்மதா ஆகியோா் கிராமப்புற பணி அனுபவத்திற்காக, தக்கலை வருவாய் கிராமங்களில் பணி அனுபவம் மற்றும் பயிற்சிகளை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், கல்குளம் பகுதியில் உள்ள வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து அவா்கள் செயல்விளக்கம் அளித்தனா். மேலும் கிராம மக்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடவு செய்தனா்.