கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீா் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
தமிழகம் முழுவதும் வெயில் நிலவி வரும்நிலையில், குமரி மாவட்டத்தில் சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால், திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீா் கொட்டுகிறது.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். அவா்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.