குமரி மாவட்ட போலீஸாருக்கு யோகா மூச்சுப் பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது.
நாகா்கோவில் ஆயுதப்படை மைதானத்தில், நாகா்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை ஆகிய 4 உள்கோட்டங்களிலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு யோகா, மூச்சுப் பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்டத்திலுள்ள காவல் துறையினருக்கு மன அழுத்தம் போக்கி, புத்துணா்வு பெறும் வகையில் இந்தப் பயிற்சி நடைபெற்றது.