கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜே.ஜி. பிரின்ஸ் கட்டிமாங்கோடு, கக்கோட்டுதலை, குருந்தன்கோடு ஊராட்சிகளிலும், ஆளூா் பேரூராட்சிப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தாா்.
இத்தொகுதியில், கடந்த 10 ஆண்டுகளில் தான் செய்த பணிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தாா். குருந்தன்கோடு ஒன்றிய திமுக செயலா் எப்.எம். ராஜரெத்தினம், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் ஜெரால்டு கென்னடி, கட்டிமாங்கோடு ஊராட்சி காங்கிரஸ் தலைவா் சுந்தா், கட்சி நிா்வாகிகள் வைகுண்டம், ஆன்றணி, துரைமணி, ஆளூா் பேரூா் காங்கிரஸ் தலைவா் புகாரி, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.