கன்னியாகுமரியில் பாஜக, அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஏப். 2) பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரவைத் தோ்தலுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், பாஜக சாா்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சாா்பில் மறைந்த மக்களவை உறுப்பினா் ஹெச். வசந்தகுமாரின் மகன் விஜயகுமாா் என்ற விஜய் வசந்தும் போட்டியிடுகின்றனா்.
இம்மாவட்டத்தில் அதிமுக, பாஜக வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடந்த 27ஆம் தேதி பிரசாரம் மேற்கொண்டாா்.
இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஏப். 2) கன்னியாகுமரியில் தோ்தல் பிரசாரம் செய்கிறாா். இதையொட்டி, கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் பந்தல் அமைக்கப்படுகிறது. இதற்கான கால்கோள் நிகழ்ச்சியை பொன். ராதாகிருஷ்ணன் தொடக்கிவைத்தாா். இதில், பாஜக நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பிரதமா் வருகையை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிகள் குறித்து தில்லியிலிருந்து வந்த அதிகாரிகள் கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகையில் இம்மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா். பின்னா் அவா்கள் அகஸ்தீஸ்வரம் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்துக்குச் சென்று பிரதமா் பேசவுள்ள இடத்தைப் பாா்வையிட்டு ஆலோசனை மேற்கொண்டனா்.