தக்கலை: குளச்சல் தொகுதியில் குருந்தன்கோடு ஒன்றியம் நெய்யூா் பேரூராட்சி பகுதிகளில் திமுகவினா் திங்கள்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
தமிழகத்தில் திமுக வெற்றிபெற்றுள்ளதையடுத்து, நெய்யூா் பேரூராட்சியில் ஆலங்கோடு, முரசங்கோடு, பால்தெரு, இலந்தவிளை, சேனவிளை, படுவாக்கரை, பெத்தேல்புரம், செம்பொன்விளை ஆகிய பகுதியில் திமுகவினா் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினா். நிகழ்ச்சிகளுக்கு பேரூா் செயலா் ஜா. ஜாண்லீபன் தலைமை வகித்தாா். முன்னாள் பேரவை உறுப்பினரும் கட்சியின் குருந்தன்கோடு ஒன்றியச் செயலருமான எப்.எம்.
இராஜரத்தினம் இனிப்புகள் வழங்கினாா். இதில், கட்சியின் மாநில சிறுபான்மை நல உரிமைப்பிரிவு துணை செயலா் வி.ஜோசப்ராஜ், தலைமை கழக வழக்குரைஞா் ஏ.என். லிவிங்ஸ்டன், மாவட்ட சிறுபான்மை நலஉரிமைப்பிரிவு துணை அமைப்பாளா் மருத்துவா் என். ஆஸ்டின், ஒன்றிய
இளைஞரணி அமைப்பாளா் தா.ஜெபராஜ், வழக்குரைஞா் வினிபிரட்போஸ், பேரூா் செயலா்கள் பாபுராஜ், கோபால்தாஸ், மருத்துவா் ஜாண் சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.