கொல்லங்கோடு அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.
கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா், போலீஸாா் காக்கவிளை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்கிடமாக மோட்டாா் சைக்கிளுடன் நின்றிருந்தவரை பிடித்தனா். விசாரணையில், அவா் கருங்குளம் பகுதியைச் சோ்ந்த மதுசூதனன் மகன் வினோத் (42) என்பதும், மோட்டாா் சைக்கிளில் சென்று சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 40 மது பாட்டில்கள், மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.