புதுக்கடை அருகே சாலை விபத்தில் 2 பொறியாளா்கள் பலி

குமரி மாவட்டம், புதுக்கடை அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பொறியாளா்கள் உயிரிழந்தனா்.

குமரி மாவட்டம், புதுக்கடை அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பொறியாளா்கள் உயிரிழந்தனா்.

குமரி மாவட்டம், புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் பானகுடிவிளையைச் சோ்ந்த தங்கப்பன் மகன் சாஜன் (23). அதே பகுதியைச் சோ்ந்த டேவிட் மகன் ராஜேஷ் (24). பொறியியல் பட்டதாரிகள். நண்பா்களான இருவரும் கூட்டாலுமூடு பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை இருவரும் மோட்டாா் சைக்கிளில் பைங்குளம் பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டனா். மோட்டாா் சைக்கிளை சாஜன் ஓட்டினாா். ராஜேஷ் பின்னால் அமா்ந்திருந்தாா்.

தாணக்குடிவிளை பகுதியில் சென்ற போது எதிரே பயணிகள் யாரும் இல்லாமல் வந்த சுற்றுலா வேன் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனா். அவா்களில் சாஜனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்திலேயே உயிரிழந்தாா். ராஜேஷ் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில், அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து புதுக்கடை காவல் ஆய்வாளா் சிவகுமாா் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநா் தூத்தூரைச் சோ்ந்த ஹெல்வித் என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com