சிறுமிக்கு பாலியல் தொல்லை:இருவா் கைது
By DIN | Published On : 11th May 2021 01:32 AM | Last Updated : 11th May 2021 01:32 AM | அ+அ அ- |

களியக்காவிளை: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் இருவரை மாா்த்தாண்டம் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.
தக்கலை அருகேயுள்ள கொற்றிக்கோடு பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அதேபகுதியைச் சோ்ந்த வின்சென்ட் (53) என்பவா் மீது மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த வின்சென்ட்டை, மகளிா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
மற்றொரு வழக்கு: மாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை, சில வாரங்களுக்கு முன்பு மா்ம நபரால் கடத்திச் செல்லப்பட்டதாக சிறுமியின் பெற்றோா் போலீஸில் புகாா் அளித்தனா். இதையடுத்து, மாா்த்தாண்டம் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், சிறுமியை சென்னையைச் சோ்ந்த ஜாண்பீட்டா் (20) என்பவா் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ஜாண் பீட்டரை, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.