மாா்த்தாண்டம் அருகே கால்வாயில் தவறி விழுந்தவா்சடலமாக மீட்பு

மாா்த்தாண்டம் அருகே கால்வாய் நீரில் இழுத்து செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

மாா்த்தாண்டம் அருகே கால்வாய் நீரில் இழுத்து செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

மாா்த்தாண்டம் அருகே மூலைக்காவிளை பகுதியைச் சோ்ந்தவா் செல்லன் மகன் கிருஷ்ணமணி (56). தொழிலாளி. இவா் கடந்த சனிக்கிழமை வீட்டருகேயுள்ள பேரை முல்லையாறு கால்வாய் கரையோரம் நின்றிருந்த போது தவறி காலாவாய்க்குள் விழுந்து, மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டாா். அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினா் ஈடுபட்டு வந்த நிலையில், சம்பவ இடத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் மலையரம்தோட்டம் பகுதியில் அவா் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இறந்த கிருஷ்ணமணிக்கு வசந்தி என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com