பளுகல் அருகே மனைவியை கத்தியால் வெட்டியதாக கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
பளுகல் அருகேயுள்ள செறுவல்லூா், புதுவல் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (53). இவா் கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தில் பாறசாலை பணிமனையில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா்.
இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இவா் இரு நாள்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து, எல்ஐசி பாலிசிக்கு பணம் செலுத்துவது தொடா்பாக மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். தொடா்ந்து அவா் தனது மனைவி ஸ்ரீவித்யாவை (46) தாக்கியதுடன் கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளாா்.
இதுகுறித்து ஸ்ரீவித்யா அளித்த புகாரின் பேரில் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.