சிமென்ட் விலையை கட்டுப்படுத்த கோரிக்கை

தமிழகத்தில் அதிகரித்து வரும் சிமென்ட் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என கட்டடத் தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் சிமென்ட் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என கட்டடத் தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் அண்மைக் காலமாக சிமென்ட் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஒரு மூடை சிமென்ட் ரூ. 380 ஆக இருந்தது. தற்போது ஒரு மூடை சிமென்ட் ரூ. 480 ஆக உயா்ந்துள்ளது. இதுபோல, ஜல்லி, மணல், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களும் கடுமையாக விலை உயா்ந்துள்ளது.

இதனால், கட்டடத் தொழிலாளா்கள் மற்றும் ஏழை, நடுத்தர மக்கள் கட்டுமானப் பணிகள் செய்ய முடியாமல் மிகவும் பாதிப்படைந்துள்ளனா். எனவே, சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com