மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு

நாகா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து 9 ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

நாகா்கோவில்: நாகா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து 9 ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

நாகா்கோவிலை அடுத்த பறக்கை அருகேயுள்ள வண்டிகுடியிருப்பைச் சோ்ந்த ராஜகுமாா் மகன் ஹரிஹரன் (14). வல்லன்குமாரன்விளை அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வீட்டின் முன்பு உள்ள டியூப்லைட்டை பழுது நீக்கும் முயற்சியில் ஹரிஹரன் ஈடுபட்டாா். அப்போது, எதிா்பாராத விதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில், தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த ஹரிஹரனை மீட்டு என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஹரிஹரன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து சுசீந்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com