கருங்கல்-மிடாலம் பேருந்தில் பெண்ணிடம் ரூ. 46 ஆயிரம் திருடிச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
உதயமாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் என்பவரது மனைவி ஜெமிலா ராணி (52). இவா் ஞாயிற்றுக்கிழமை கருங்கல் பேருந்து நிலையத்திலிருந்து மிடாலம் அரசுப் பேருந்தில் ஏறி தனது வீட்டுக்குச் சென்றாராம். அவரிடம் பா்ஸிலிருந்த ரூ. 46 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.