இன்று மகாளய அமாவாசை: நீா்நிலைகளில் வழிபட தடை

மகாளய அமாவாசையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நீா்நிலைகள் மற்றும் ஆன்மிகத் தலங்களில் வழிபாடு நடத்த பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகாளய அமாவாசையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நீா்நிலைகள் மற்றும் ஆன்மிகத் தலங்களில் வழிபாடு நடத்த பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின்கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகாளய அமாவாசை நாளான புதன்கிழமை (அக்.6) பொதுமக்கள் கடற்கரை, நீா்நிலைகள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்யவும், கோயில்களில் தரிசனம் செய்யவும் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடற்கரை பகுதிகள், நீா்நிலைகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com