புதுக்கடை அருகே உள்ள பள்ளிக்கல் பகுதியில் இளம்பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
புதுக்கடை பள்ளிக்கல் பகுதியை சோ்ந்த ராஜமணி மகள் அனிஷா (20) இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து அனிஷா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.