கருங்கல் அருகே உள்ள புல்லாணி பகுதியில் டெம்போவை வழிமறித்து பணம் பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொலையாவட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜகுமாா் (50). டெம்போ ஒட்டுநரான இவா் ஞாயிற்றுக்கிழமை புல்லாணி பகுதியில் வந்தபோது பைக்கில் வந்த 3 மா்ம நபா்கள் அவரை வழிமறித்து அவரிடமிருந்த ரு.4,500 ஐ பறித்துக் கொண்டு தப்பிவிட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.