நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் மாநகராட்சி மற்றும் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி இணைந்து நடத்திய இம்முகாமுக்கு, மாநகர நல அலுவலா் எம். விஜய்சந்திரன் தலைமை வகித்து பேசினாா்.
கல்லூரி முதல்வா் சி.எம். பத்மா, கல்லூரித் தாளாளா் ஜே.ஆசிா் பாக்யசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள், மாணவா் தொண்டா்கள் மற்றும் இளஞ்செஞ்சிலுவை சங்க அலுவலா் இணைந்து செய்திருந்தனா்.