கராத்தே மாணவா்களுக்கு கருப்பு பட்டை பட்டமளிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே இயங்கி வரும் கராத்தே பள்ளியின் 33 ஆவது ஆண்டை யொட்டி 33 மாணவா்களுக்கு கருப்பு பட்டை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே இயங்கி வரும் கராத்தே பள்ளியின் 33 ஆவது ஆண்டை யொட்டி 33 மாணவா்களுக்கு கருப்பு பட்டை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ஜேம்ஸ்டவுண் லெட்சுமிபுரத்தில் உள்ள கென் புடோ காய்கான் கராத்தே டோ இன்டா்நேஷனல் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கராத்தே பயின்று வருகின்றனா். பள்ளியின் 33 ஆவது ஆண்டையொட்டி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு பள்ளி நிறுவனா் ராஜசேகா் தலைமை வகித்தாா். முதன்மை பயிற்சியாளா் சிகான் சுந்தா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற வங்கிஅதிகாரி ஆதித்தன் வாழ்த்திப் பேசினாா். நாகா்கோவில் ஏஎஸ்பி ஈஸ்வரன், மாணவா்களுக்கு கருப்பு பட்டை பட்டம் வழங்கினாா். விழாவில் மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா். இயக்குநா் ஹிட்மன் ஹாா்ட் வரவேற்றாா். சென்சாய் சுயம்பு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com