கருங்கல் அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கருங்கல் அருகேயுள்ள சகாய நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜான் (63). கூலித் தொழிலாளியான இவா், சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.