கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 61,015 ஆகவும், அதில் மேலும் 30 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 59,696 ஆகவும் உயா்ந்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 1033 போ் பலியாகியுள்ள நிலையில், தற்போது 286 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.