களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே மினிலாரி கால்வாயில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
பளுகல் ராமவா்மன்சிறை பகுதியைச் சோ்ந்தவா் சுஜின் (33). மினி லாரி ஓட்டுநரான இவா் திங்கள்கிழமை மாலையில் நட்டாலம் பகுதியில் உள்ள கல்குவாரியிலிருந்து பாறைக்கல் ஏற்றி வர சென்றாராம்.
குவாரியிலிருந்து பாறைக்கல் கிடைக்காததால் பாரம் இன்றி மினிலாரியை அப்பகுதி கால்வாய் கரையோரமாக ஓட்டிவந்துள்ளாா். அப்போது நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதிய மினி லாரி கால்வாய்க்குள் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநா் சுஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
குழித்துறை தீயணைப்புப் படை வீரா்கள் மற்றும் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.