கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61,245 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஒருவா் உயிரிழந்ததையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 1037 ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 34 போ் உள்பட இதுவரை 59,950 போ் குணமடைந்துள்ளனா்.
தற்போது 258 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.