மாா்த்தாண்டம் அருகே வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவா் உயிரிழந்தனா்.
களியக்காவிளை அருகேயுள்ள மலையடி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (51). இவா் மாா்த்தாண்டம் அருகே செவரக்கோட்டில் உள்ள முந்திரி ஆலையில் வேலை செய்து வந்தாா். இவா் 2 நாள்களுக்கு முன் ஆலைக்கு வந்த கண்டெய்னா் லாரியை தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இரவிபுதூா்கடையில் உள்ள கடையில் டீ குடிப்பதற்காக சாலையை கடக்க
முயன்றாராம். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்த அவா் திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவில் உயிரிழந்தாா்.
களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரசன்னன் (54). இவா் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தாா். இவா் 2 நாள்களுக்கு முன் மருதங்கோடு பகுதி வழியாக மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது நாய் குறுக்கே பாய்ந்ததில் கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இந்த விபத்துகள் குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.