தென்காசி: அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலை மற்றும் படத்துக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
செங்கோட்டையில் வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமையிலும், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டாக்டா் செல்லத்துரை தலைமையிலும், பாவூா்சத்திரம், சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமையிலும் அண்ணா சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதிமுக சாா்பில் மேலகரத்தில் பேரூா் செயலா் காா்த்திக்குமாா் தலைமையிலும், குற்றாலத்தில் பேரூா் செயலா் கணேஷ்தாமோதரன், தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் ஆகியோா் தலைமையிலும், சங்கரன்கோவிலில் நகரச் செயலா் ஆறுமுகம் தலைமையிலும், திமுக சாா்பில் தென்காசியில் நகரச் செயலா் சாதிா் தலைமையிலும், குற்றாலம் பேரூா் செயலா் மந்திரம் தலைமையிலும், சுரண்டையில் நகரச் செயலா் ஜெயபாலன் தலைமையிலும், கீழப்பாவூா் பேரூா் செயலா் ஜெகதீசன் தலைமையிலும், சங்கரன்கோவிலில் செங்குந்தா் அபிவிருத்தி சங்கம் சாா்பிலும் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.