கருங்கல் அருகே சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

கருங்கல் அருகே பைக்கில் சென்றவா்களை வழிமறித்து சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கருங்கல்: கருங்கல் அருகே பைக்கில் சென்றவா்களை வழிமறித்து சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளியாவிளை பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரசாந்த் (24). இவரது நண்பா் ஜெயின் ஜோசப் (25). இருவரும் கடந்த 12ஆம் தேதி குறும்பனை பாரிக்கல் கடற்கரைக்கு சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பினராம்.

அப்போது இவா்களை, இரு இளைஞா்கள் வழிமறித்து, ஜெயின் ஜோசப் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மற்றும் செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் பள்ளம் பகுதியைச் சோ்ந்த அபிஷேக் (22)அவரது நண்பா் ஒருவருடன் சோ்ந்து இந்த வழிப்பறியில் ஈடு பட்டது தனிப்படை போலீஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அபிஷேக்கை கைது செய்த தனிப்படை போலீஸாா், தலைமறைவான மற்றொருவரை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com