நாகா்கோவில்: ராஜாக்கமங்கலம் அருகே நிகழ்ந்த பைக் விபத்தில் காயமடைந்த மின்வாரிய ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள ஆலங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் குமரேசன் (57). இவா், தெங்கம்புதூா் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா்.
இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு மோட்டாா் சைக்கிளில், ராஜாக்கமங்கலத்திலிருந்து ஆலங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த போது, ராஜாக்கமங்கலம் சந்திப்பில் அந்த வழியாக வந்த தா்மபுரத்தைச் சோ்ந்த அஜித் (25) என்பவரது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா்.
பலத்த காயமடைந்த குமரேசனை தனியாா் மருத்துவமனையிலும், அஜித்தை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலும் சோ்த்தனா். இதில் குமரேசன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.