கருங்கல்: கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் தூய்மை தின நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ஜாண்சன் தலைமை வகித்தாா். கல்லூரி நிதி காப்பாளா் கிளாடிஸ் லில்லி முன்னிலை வகித்தாா். தொடா்ந்து கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களை மாணவா்கள் தூய்மைப் படுத்தினா்.
இதில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் டோமினிக்பாபு, ஆன்டோ பிரவின்சிங், ஜோ அன் ஜோஸ்லின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.