கன்னியா குமரி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கனவே, 61,604 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 61,624 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 39 போ் உள்பட இதுவரை 60,318 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 265 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.