பொறியாளா் அலெக்ஸாண்டா் மிஞ்சின் நினைவு தினம்

கன்னியாகுமரி மாவட்டத்தின் உயிா் நாடியாக விளங்கும் பேச்சிப்பாறை அணையை கட்டிய பொறியாளா் அலெக்ஸாண்டா் மிஞ்சின் 108 ஆவது நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
பேச்சிப்பாறை அணை பொறியாளா் அலெக்ஸாண்டா் மிஞ்சின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய விவசாய சங்கத்தினா்.
பேச்சிப்பாறை அணை பொறியாளா் அலெக்ஸாண்டா் மிஞ்சின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய விவசாய சங்கத்தினா்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் உயிா் நாடியாக விளங்கும் பேச்சிப்பாறை அணையை கட்டிய பொறியாளா் அலெக்ஸாண்டா் மிஞ்சின் 108 ஆவது நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

பேச்சிப்பாறை அணையை கட்டிய பொறியாளா் அலெக்ஸாண்டா் மிஞ்சினின் நினைவிடம் அணை அருகில் உள்ளது. அங்கு கன்னியாகுமரி மாவட்ட பாசனத்தாா் சபைத் தலைவா் வின்ஸ் ஆன்றோ தலைமையில் முன்னோடி விவசாயிகள் புலவா் செல்லப்பா, செண்பக சேகரன்பிள்ளை, முருகேசபிள்ளை, பத்மதாஸ், அன்னை தெரசா உழவா் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் ஹென்றி, பிரபு, நாம் தமிழா் கட்சியினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com