கருங்கல் அருகே உள்ள எட்டணியில் தொழிற்சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து செப். 27 இல் நடைபெறும் மறியல் போராட்டம் குறித்து விளக்க தொழிற் சங்கங்களின் தெருமுனைக்கூட்டத்துக்கு முள்ளங்கனாவிளை காங்கிரஸ் தலைவா் அருள்ராஜ் தலைமை வகித்தாா். கிள்ளியூா் ஒன்றிய கட்டுமான சங்கச் செயலா் ரசல் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தாா். இதில், மாவட்டதி.மு.க. இளைஞரணி அமைப்பாளா் ததேயூபிரேம்குமாா், கிள்ளியூா் வட்டாரகாங்கிரஸ் தலைவா் டென்னிஸ் ஆகியோா்பேசினா்.
இதில், மரியசிசுகுமாா், சாா்லஸ், சோபனம், பால்ராஜ் உள்பட தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.